Wednesday 14 March 2018

கல்வி கடனை விசூலிக்கும் பொறுப்பை தனியாரிடம் விற்ற SBI

பாரத ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் பெற்று திரும்ப செலுத்தாதவரா நீங்கள் விரைவில் உங்கள் வீட்டு கதவை தனியார் நிறுவன அடியாட்கள் தட்டும் நிலை உருவாகியிருக்கிறது. மாணவர்களுக்கு தரப்பட்டு திரும்ப செலுத்தப்படாத கல்வி கடன்களில் 50 சதவீதம் அளவை தனியார் நிறுவனத்திற்கு எஸ்.பி.ஐ. விற்றுவிட்டது. மொத்தமுள்ள 1,565 கோடி ரூபாய் நிலுவை தொகையில், 915 கோடி ரூபாயை வசூலிக்கும் பொறுப்பு ஏ.ஆர்.சி. எனப்படும் சொத்து மீட்பு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் மூலம் இந்த விவரம் வெளியாகியிருக்கிறது. கல்வி கடன் பெற்று 3 தவணைகளுக்கு மேல் செலுத்தாத மாணவர்கள் மீது இனி தனியார் வசூல் நிறுவனங்களின் பிடி இறுகும்.
கல்விக் கடனை செலுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் நெருக்கடி அளித்ததால் 2 ஆண்டுகளுக்கு முன் மதுரை அவனியாபுரத்தில் பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்ததால் ஏ.ஆர்.சி. வசூல் நிறுவனங்கள் தற்காலிகமாக அமைதிகாத்தனர். தற்போது வராக் கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை எஸ்.பி.ஐ. விற்றுவிட்டதால் மீண்டும் தனியார் வசூல் நிறுவன அடியாட்களின் ஆதிக்கம் அதிகாரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Friday 9 March 2018

நிர்வாணமாக போஸ் கொடுத்த கங்கனா

                                                
  கங்கனா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவருக்கு கடைசியாக வந்த சில படங்கள் மட்டுமே தோல்வி.
                                                ஆனால், இரண்டு முறை தேசிய விருது, தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.
                                                                                                                                                                              இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் ஒரு படத்திற்காக ஏற்கனவே நிர்வாணமாக ஒரு போஸ் கொடுத்தார், அதை தொடர்ந்து தற்போது கொடுத்திருக்கும் போஸ் பாருங்கள். இதோ...

Wednesday 7 March 2018

கைது செய்யப்படுவாரா நடிகை கஸ்தூரி..!

நடிகை கஸ்தூரி சமீப காலமாக தன்னுடைய மனதில் படும் சமூக கருத்துக்களை
வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் ஒரு சில கருத்துக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும் சில கருத்துக்கள் இவருக்கு பிரச்சனையாகவே மாறிவிடுகிறது.


கடந்த மாதம் 22-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் தமிழக மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
கஸ்தூரியின் ட்விட்:

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஸ்தூரி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டரில் ஒரு கலவரமே வெடித்தது.
இவர் சமூகத்தை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்ததால்... இரு சமூகத்தினரிடையே சண்டையை தூண்டிவிடும் விதத்தில் கஸ்தூரி கூறியுள்ளதாகவும். இந்த செயலுக்கு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் கஸ்தூரி கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


Sunday 4 March 2018

சன்னி லியோனுக்கு இரண்டா?

                         


       பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

                               இந்நிலையில் தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக சன்னி லியோனும் அவரது கணவரும் இன்று அறிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பதிவில், “திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் டேனியல் வெபரும் ஜூன் 21ஆம் தேதிதான் தெரிந்துகொண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கணவர் வெபர் ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், "இது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளுடன் போஸ் கொடுக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இந்த குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அருகே போலீஸ் என கூறி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் பெண்களே உஷார்...

                                                                சென்னை அருகே நீலாங்கரையில் காதலருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் போலீஸ் எனக்கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலையூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி (வயது 18) நேற்று மாலை 5 மணி அளவில் நீலாங்கரை அருகே உள்ள அக்கரை சோதனை சாவடியை ஒட்டி உள்ள கடற்கரையில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் சென்று நீங்கள் யார்? இங்கே ஏன் தனிமையில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த இடம் பாதுகாப்பானது இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அந்த வாலிபர், நான் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து வருகிறேன். சப்-இன்ஸ்பெக்டரிடம் உங்களை பற்றிய தகவல்களை கூறிவிட்டு செல்லுங்கள் என்று கூறி தனது மோட்டார் சைக்கிளில் ராதிகாவை ஏறிச் சென்று கொண்டு அருகில் இருந்த தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அப்போது தான் அந்த மாணவிக்கு, ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று பொறி தட்டவே அந்த வாலிபரிடமிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த வாலிபர், இளம்பெண்ணை மிரட்டி விடுதிக்குள் உள்ள ஒரு அறையில் அடைத்துள்ளார்.

அதன் பின், அந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப் போட்டு அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டிய மர்ம நபர், விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சாலையோரமாக இளம்பெண்ணை இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

Friday 2 March 2018

..JIO - 10GB இலவசம்...

..JIO - 10GB இலவசம்...
                                                                                                   
                                                                             ** நேற்று மாலை முதல் குரல் அழைப்பு சேவையில் ஏற்பட்ட சிரமத்திற்கான மன உளைச்சலை போக்கும் வகையில் தமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 10GB கூடுதல் டேட்டாவினை Jio வழங்கியுள்ளது... வாடிக்கையாளர்கள் இந்த இலவச டேட்டாவை பெற.. 1299 என்ற எண்ணிற்கு Missed Call கொடுக்கவேண்டும்... இந்த இலவச டேட்டாவிற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்...

வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி அப்ளிகேஷன் டவுன்லோடு செய்திருக்க வேண்டும் ....

Thursday 1 March 2018

தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரி!

                                       சிரிய அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய இராசாயன தாக்குதலில், தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் பொதுமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.



ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அல்கொய்தா தொடர்பு பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தி சிரியா ராணுவம் அந்த பகுதிகளை மீட்டு வருகிறது. சிரியா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டது. எனினும், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பும், இந்த பகுதியில் ஒரு சிறுபகுதியில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி, ரஷியா மற்றும் சிரியா படையினர் இந்த பகுதியில் தாக்குதல் நிகழ்த்துவதாகக்