பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில்
தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக சன்னி லியோனும் அவரது
கணவரும் இன்று அறிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும்
அஷெர் சிங் வெபர் என்று பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர்.
சமூக
வலைத்தளங்களில் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பதிவில், “திருமண வாழ்க்கையில்
குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம்
என்பதை நானும் டேனியல் வெபரும் ஜூன் 21ஆம் தேதிதான் தெரிந்துகொண்டாம்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கணவர் வெபர்
ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், "இது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்”
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளுடன் போஸ்
கொடுக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment